உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி மீது பஸ் மோதி 11 பக்தர்கள் படுகாயம்

லாரி மீது பஸ் மோதி 11 பக்தர்கள் படுகாயம்

திண்டிவனம்:கர்நாடகாவிலிருந்து மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு, 46 பக்தர்களுடன் தனியார் பஸ், சென்றது. திண்டிவனம் - சென்னை சாலையில் பாதிரி கிராமம் அருகே காலை, 8:30 மணிக்கு வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியதில், நிலை தடுமாறிய லாரி சாலையோர மரத்தின் மீது மோதியது.விபத்தில், லாரி டிரைவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன், 33, மற்றும் பஸ்சில் பயணம் செய்த பக்தர்கள் உட்பட, 11 பேர் படுகாயமடைந்தனர்.அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ