உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.11.33 கோடிக்கு வர்த்தகம்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.11.33 கோடிக்கு வர்த்தகம்

திருக்கோவிலுார், : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கடந்த ஐந்து நாட்களில் ரூ. 11.33 கோடி வர்த்தகமானது.அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 5 நாட்களில் மட்டும் உளுந்து, நெல் உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் அதிக அளவில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது, அறுவடை பணிகள் தீவிரமடைந்திருப்பதால் கடந்த 5 நாட்களில் வரத்து சீராக இருந்தது.இதற்கு காரணம் நெல்லுக்கு ஆயிரம் லாட்டும், உளுந்துக்கு 150 லாட் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக கமிட்டி நிர்வாகத்திற்கும் பொருட்களை கையாள்வது உள்ளிட்ட நிர்வாக பணிகள் சுலபமாக அமைந்தது. விலையும் குறையவில்லை. விவசாயிகளுக்கும் வர்த்தகம் லாபகரமாக இருந்தது.இதன் காரணமாக 5 நாட்களில் 2,752.54 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் கையாளப்பட்டு, 11.33 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவிலான விளைபொருட்கள் வர்த்தகமான கமிட்டி பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை