மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
05-Jun-2025
விழுப்புரம் : புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் 113 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது. தெரியவந்தது. விசாரணையில், ஆரணி அடுத்த சம்பூவரயானுார் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், 22; சுரேஷ், 21; என்பது தெரியவந்தது.இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
05-Jun-2025