உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

வேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், நேற்று காலை நகர பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கிழக்கு பாண்டி ரோடு ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் அதிவேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்த தாமரைகுளம் கலியன் மகன் அபிலாஷ் பாலாஜி, 19; மீது, வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். இதேபோல், கோலியனுார் கூட்டுரோடு அருகே அதிவேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டி வந்த ராமையான்பாளையம் அய்யனார் மகன் ஆகாஷ், 21; என்பவர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை