உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள அரசு உணவுப்பொருள் குடோன் அருகே கஞ்சா விற்ற ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் குணால், 22; தென்னமாதேவி கன்னியப்பன் மகன் செல்வமணி, 24; வண்டிமேடு லோகநாதன் மகன் வினோத்குமார், 19; அயனம்பாளையம் மருதமலை மகன் உதயன், 19; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்த யுவராஜ், ரகுபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் தென்றல் ,23; முருகேசன் மகன் ராஜா, 24; ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கஞ்சா விற்றது தெரிந்தது. உடன் தென்றல், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை