உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையைக் கடக்க முயன்ற விவசாயி பைக் மோதி பலி

சாலையைக் கடக்க முயன்ற விவசாயி பைக் மோதி பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி, பைக் மோதி இறந்தார்.திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 59; விவசாயி. இவர் திண்டிவனத்தில் வீட்டுக்கு தேவையான பொங்கல் பொருட்களை வாங்கிக் கொண்டு, மீண்டும் ஏப்பாக்கம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலை, காலேஜ் ரோடு சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ