உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் தகராறு துண்டானது கை விரல்

போதையில் தகராறு துண்டானது கை விரல்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே மது போதையில் ஏற்பட்ட மோதலில் கை விரலை கண்டித்து துண்டாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலம் அடுத்த கொடுகூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுனில், 23; கூலித் தொழிலாளி. கடந்த 11ம் தேதி நண்பர் வினோத்குமார், 23; மற்றும் சிலருடன் சேர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 13ம் தேதி அதே ஊரில் பால் பூத் அருகே வினோத்குமார் அண்ணன் விக்னேஷ் 29; ஏன் என் தம்பியை தாக்கினாய் என சுனிலிடம் தட்டிக்கேட்டார்.ஆத்திரம் அடைந்த சுனில், விக்னேைஷ தாக்கி கைவிரலை கடித்தார். இதில் விக்னேஷ் கைவிரல் துண்டானது. விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து சுனிலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை