குடிபோதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
விழுப்புரம்; குடிபோதையில் விஷம் குடித்த பட்டதாரி வாலிபர் இறந்தார்.விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், 27; பொறியியல் பட்டதாரி. இவர், வேலியம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், குடிபோதையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.