பூப்பந்து போட்டி ஒய்காப் பள்ளி சாதனை
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர்.தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான 40-வது பாரதியார் தின குழு போட்டியில் 19வயதிற்குட்பட்ட பூப்பந்து விளையாட்டில் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர் .வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ்பாபு ,உடற்கல்விஆசிரியர் செல்வ குமார்,விமல்ராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.