மத்திய மாவட்ட தி.மு.க., நாளை செயற்குழு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் நாளை (23ம் தேதி) நடக்கிறது.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை 23ம் தேதி காலை 9:00 மணிக்கு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. எனது தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர், கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.விழுப்புரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாநில பொறியாளர் அணி செயலாளர், வானுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.