பறிமுதல் வாகனங்கள் வரும் 30ம் தேதி ஏலம்
விழுப்புரம்: விழுப்புரம் காவல் துறை பறிமுதல் வாகனங்களுக்கான ஏலம் வரும் 30ம் தேதி நடக்கிறது. எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், போதை தடுப்பு வழக்கில் (கஞ்சா) கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட ஒரு ஆட்டோ, 7 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய 8 வாகனங்களுக்கான பொது ஏலம், விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. ஏலம் கேட்கும் நபர்கள் ஆதார் அட்டை நகலுடன் வந்து ஏலத்தில் கலந்துகொள்ளலாம். ஏலத்திற்கான முன் பணம் ரூ.2,000 செலுத்தி டோக்கன் பெற்று ஏலம் கேட்கலாம். ஏலம் எடுத்த நபர், ஏலத் தொகையும், விற்பனை வரியையும் சேர்த்து செலுத்தி, ஏலம் எடுத்த வாகனங்களை அன்று அல்லது 3 தினங்களுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால், அந்த வாகனங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி மறு ஏலத்தில் விடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.