உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு

விக்கிரவாண்டி : பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் லட்சுமிபுரத்தில் நடந்தது.ஓ.பி.ஆர்., மகளிர் கல்லுாரியில் நடந்த ஊர்வலத்திற்கு டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலம் லட்சுமிபுரம் - செஞ்சி சாலையில் சென்றபோது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனர்.தொடர்ந்து குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறித்து சமுகநீதி, மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தேவநாதன், மதியழகன், தவமணி ஆகியோர் பேசினர். ஊர்வலத்தில் மாணவியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ