உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேத்தியுடன் மகள் மாயம்: தந்தை புகார்

பேத்தியுடன் மகள் மாயம்: தந்தை புகார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பேத்தியுடன் மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்தவர் சிவசங்கரன் மனைவி நிறைமதி,35; இவர்களுக்கு தனுஷ்கா,8; என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், நிறைமதி தனது கணவரை பிரிந்து தனது மகளோடு அதே பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறார். இந்த நிலையில் கடந்த 28 ம் தேதி, நிறைமதியை அவர் வீட்டிற்கு சென்று தந்தை கண்ணப்பன் பார்த்த போது மகளும், பேத்தியும் அங்கில்லாதது தெரியவந்தது. பின், அவர்களை பல இடங்களில் தேடியும் காணவில்லை. கண்ணப்பன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை