உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நுாறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நுாறு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியில் நுாளு நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார்.மாவட்ட துணைச் செயலாளர் கலியமூர்த்தி, நகர தலைவர் பால்ராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், ஒன்றியத் தலைவர் மும்மூர்த்தி, சேகர், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய குழு மாலா, பிரேமா மகேஸ்வரி நிர்வாகிகள் மகுடமணி, விஜயகுமார், சுப்ரமணி உட்பட பலர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை