உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏலச்சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி செய்த மூதாட்டி கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி செய்த மூதாட்டி கைது

விழுப்புரம்; வானுாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை சேர்ந்தவர் வாசுகி,61; இவரும், இவரது கணவர் ஆதிகேசவன், மகன் தங்கதுரை ஆகியோர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர். இவர்களிடம், வானுார் பகுதியை சேர்ந்த 75 பேர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்தாண்டு ஜூலை 20ம் தேதி வரை 33 மாதங்கள் தலா ரூ.10 ஆயிரம் வீதம் கட்டி வந்தனர்.சீட்டு முடிந்த நிலையில், தொகையை அவர்களுக்கு தராமல் வாசுகி உட்பட மூவரும் ஏமாற்றி வந்தனர். மூவரும் சேர்ந்து மொத்தம் ரூ.51 லட்சத்து 35 ஆயிரத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக, சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், வாசுகி, தங்கதுரை, ஆதிகேசவன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து போலீசார் தேடி வந்தனர். நேற்று வானுார் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற வாசுகியை போலீசார் கைது செய்தனர். ஆதிகேசவன், தங்கதுரையை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி