மேலும் செய்திகள்
போலி டாக்டர் கைது
17-Nov-2024
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 52;இவர், எலவனாசூர்கோட்டையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மருத்துவமனையை, எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி, ஆய்வு செய்தபோது, மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.
17-Nov-2024