மேலும் செய்திகள்
வெந்நீர் கொட்டி சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு
10-Nov-2024
வானூர்: வானூர் அடுத்த இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சந்தியா, 30; இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் திவ்ய தர்ஷன், 3 வயதில் சாய்பல்லவி ஆகிய மகன், மகள் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சந்தியாவிற்கும் ராஜ்குமாருக்கும், குடிநீர் பிடித்து வருவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து ராஜ்குமார், தனது மனைவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.இதனால் விரக்தியடைந்த சந்தியா, கடந்த 2ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, சந்தியாவின் தாய் ராதா கொடுத்துள்ள புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Nov-2024