உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்தது கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் மனைவி, பூங்காவனம், 50; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 26ம் தேதி இரவு, மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பூங்காவனம் இறந்தார். புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ