உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த 2 மான்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 மான்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு

திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே 80 அடி விவசாய கிணற்றில் விழுந்த 2 புள்ளிமான்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசேவலை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 45; விவசாயி. இவருக்கு சொந்தமான 80 அடி கிணற்றில் 2 புள்ளி மான்கள் விழுந்து உயிருக்கு போராடின.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்தினர் நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் சென்று ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த இரு புள்ளிமான்களை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை