உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் நகை செய்யும் தொழிலாளி மரணம்

விபத்தில் நகை செய்யும் தொழிலாளி மரணம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கில் சென்ற நகை செய்யும் தொழிலாளி, நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார்,45; நகை செய்யும் தொழிலாளி. இவர், கடந்த 1ம் தேதி தனது பைக்கில் புதுச்சேரி - விழுப்புரம் மார்க்க சாலையில் சென்றார்.கம்பன் நகர் அருகே சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை