உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

 செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்

செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மகா தீப உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 15ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. இரவு 7 மணிக்கு ருத்ர ஹோமமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷணமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். நேற்று மாலை 5 மணிக்கு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தன. 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். இதில் அறங்காவலர் இந்திரா ரவிச்சந்திரன், விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ