உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் சிப்காட்டில் கூலித்தொழிலாளி இறப்பு

திண்டிவனம் சிப்காட்டில் கூலித்தொழிலாளி இறப்பு

திண்டிவனம் : திண்டிவனம் சிப்காட்டிலுள்ள தனியார் கம்பெனியில் பெண் தொழிலாளி இறந்தது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி வசந்தா, 50; இவர் திண்டிவனம்-செஞ்சி ரோடு, சிப்காட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு சென்றுள்ளாார். அப்போது அங்குள்ள பாத்ரூமில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வசந்தாவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வசந்தாவின் மகன் சுகுமார், 25; கொடுத்துள்ள புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ