உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபட் மீது வேன் மோதி ஒருவர் பலி

மொபட் மீது வேன் மோதி ஒருவர் பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற மொபட்மீது வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 52; கேபிள் டிவி ஆப்பரேட்டர். நேற்று முன்தினம் காலை இவர் தன்னுடைய மொபட்டில் சித்தணி கூட்ரோட்டில் சாலையை கடந்த போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொலிரோ பிக் அப் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தன் இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை