உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓமந்துாரில் ஓ.பி.ஆர்.பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஓமந்துாரில் ஓ.பி.ஆர்.பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் : முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆரின் பிறந்த நாள் விழாவையொட்டி, ஓமந்துாரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் அருகே ஓமந்துாரில் வரும் பிப்.1ம் தேதி முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி 129 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது. அங்குள்ள அவரது மணி மண்டபத்திற்கு பக்கத்தில், ரெட்டி நல சங்கத்தின் சார்பில் மருத்துவமுகாம், ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் சங்கத்தின் மாநில துணை தலைவர் பி.ரவிரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் விழா நடந்தது.இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் ரமணன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, தியாகராஜன், பாபு, தாமு, குருசேவ், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ