கண்டக்டர் மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பஸ் கண்டக்டர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் தாமோதரன், 32; இவர், அரசு போக்குவரத்து கழக பஸ்சில் (புதுச்சேரி பணிமனை) கண்டக்டராக உள்ளார். கடந்த 18ம் தேதி, புதுச்சேரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது மனைவி அனிதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.