உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம் : வானுாரில் பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வானுாரை சேர்ந்தவர் தாண்டவராயன் மகள் தர்ஷினி,21; இவர், புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள லேப் ஒன்றில் டெக்னிஷியனாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டிலிருந்து பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தாண்டவராயன் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை