அடையாளம் தெரியாத சடலம் போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே 80 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து வி.ஏ.ஓ., கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என்ற விபரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.