உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை கண்டமங்கலம் அருகே துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை கண்டமங்கலம் அருகே துணிகரம்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த பள்ளிபுதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 55; இவர், நேற்று முன்தினம் 7ம் தேதி காலை ஏரிப்பாக்கம் கிராமத்தில் நடந்த கோவில் கும்பாபிேஷக விழாவிற்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.கும்பாபிேஷகம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை