| ADDED : நவ 25, 2025 05:49 AM
திருக்கோவிலுார்: குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், பரனுாரைச் சேர்ந்தவர் கனகராஜ், 60. இவரது மனைவி விஜயலட்சுமி, 55. இவர்களின் மூத்த மகன் திருமணமாகி, சென்னையில் வசிக்கிறார். இளைய மகன் பிரகாஷ், 29, திருமணமாகி வீட்டிலேயே தங்கியுள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய இவர், நேற்று முன்தினம் இரவு, தன் தந்தை கனகராஜிடம், தகராறு செய்து, தாக்கினார். தடுத்த தாய் விஜயலட்சுமியையும் கல், கையால் தாக்கினார். இதில் இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு விஜயலட்சுமி இறந்தார்; கனகராஜ் சிகிச்சை பெறுகிறார். அரகண்டநல்லுார் போலீசார், தாயை அடித்து கொன்ற மகன் பிரகாஷை கைது செய்தனர்.