உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் ஆய்வு

பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் ஆய்வு

திண்டிவனம்; திண்டிவனத்தில் தீபாவளி பண்டிகைக்காக, தற்காலி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களின், பட்டாசு கடைகளை சப் கலெக்டர் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை வரும் 20 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திண்டிவனம் பகுதியில் பட்டாசு கடை வைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த, 20 பேர் தற்காலிக லைசென்ஸ் கேட்டு சப் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, விண்ணப்பித்த பட்டாசு கடைகளுக்கு சென்ற சப்கலெக்டர் ஆகாஷ், அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றதா என்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தாசில்தார் யுவராஜ், வி.ஏ.ஓ., அழகுவேல் உள்ளிட்ட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை