உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் படுகாயம்

ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் படுகாயம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயிலிருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயமடைந்தார்.புதுக்கோட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர் கோபால் மகன் நிதீஷ்குமார், 21; இவர் நேற்று முன்தினம் இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தஞ்சாவூரிலிருந்து சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார்.நேற்று அதிகாலை 1:30 மணியளவில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்த போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை ரயில்வே போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ