பெண்ணிடம் 3 சவரன் நகை அபேஸ்
விழுப்புரம்,: பஸ்சில் பெண்ணிடம், 3 சவரன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி, 57; இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து அரசு பஸ்சில் ஏறி, முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் இறங்கினார். அங்கு இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.