உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமிக்கு தொந்தரவு; போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிக்கு தொந்தரவு; போக்சோவில் 2 பேர் கைது

கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு, 2 வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் மகன் ராகவன், 21; அவரது சகோதரர் கி ரி, 19; ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை