மேலும் செய்திகள்
அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
31-Oct-2025
விழுப்புரம்: பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய், புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, திருப்பாச்சனுார் புது காலனியை சேர்ந்த ராமு, 24; மற்றும் காணையை சேர்ந்த செல்வராஜ், 21; ஆகியோர் தங்கள் பைக்கில் பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக, பைக்கில் சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராமு, செல்வராஜை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
31-Oct-2025