உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது

அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது

விழுப்புரம்: பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய், புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, திருப்பாச்சனுார் புது காலனியை சேர்ந்த ராமு, 24; மற்றும் காணையை சேர்ந்த செல்வராஜ், 21; ஆகியோர் தங்கள் பைக்கில் பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக, பைக்கில் சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராமு, செல்வராஜை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை