உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமூக நல்லாசிரியர் விருது

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமூக நல்லாசிரியர் விருது

விழுப்புரம் : விழுப்புரம் அரவிந்தா பேரா மெடிக்கல் மையத்தில் ஆசிரியர் தின விழா நடந்தது. அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு செல்வதுரை தலைமை தாங்கினார். ஆசிரியர் வீரபாஸ்கரன் வரவேற்றார். அமீர் அப்பாஸ், சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் பலராமன் முன்னிலை வகித்தனர். விழாவில், 14 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சமூக நல்லாசிரியர் விருதுகளை ராமமூர்த்தி எம். எல்.ஏ., வழங்கினார். ஜி.எம்.ஆர்., வரலட்சுமி பவுண்டேசன் முதுநிலை திட்ட அலுவலர் சொர்ணமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை