உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு

பதிவு எண் மோசடி: 5 பேர் மீது வழக்கு

விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் புதுச்சேரியிலுள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் 4 லட்சம் ரூபாய் கடன் பெற்று ஈச்சர் மினி லாரி வாங்கியுள்ளார். மினிலாரி வாங்கிய பின் ஒரு தவணை கூட திரும்பிச் செலுத்த வில்லை. இந்த கடனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அம்சா, புரு÷ஷாத்தமன் ஜாமீன் கொடுத்துள்ளனர். இந்நிலையில் செங்காடு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ், வளவனூர் பிரபு சேர்ந்து மினிலாரியின் பதிவு எண்ணை மாற்றி விற்றுள்ளனர். தனியார் நிதி நிறுவன சட்ட உதவியாளர் விவேகானந்தன் புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை