உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

வானுார்: புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிளியனுார் அடுத்த மொளசூரில், புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திச்சென்று விற்கப்படுவதாக, புகார்கள் எழுந்தன. இதையடுத்து கிளியனுார் போலீசார் அப்பகுதிக்கு சென்ற சோதனை நடத்தினர். அப்போது, மொளசூர் கோட்ரஸ் தெருவை சேர்ந்த ஏழுமலை மனைவி சத்யா, 49; என்பவர் வீட்டில், புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை