உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

விழுப்புரம்,: விழுப்புரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த தொழிலாளி இறந்தார்.விழுப்புரம், கீழ்ப்பெரும் பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரமோகன், 40; கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார்.சந்திரமோகன் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ