உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

 மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி இறந்தார். புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் இளவரசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதி கிருஷ்ணன், 40; மரம் அறுக்கும் தொழிலாளி. இவர், நேற்று காலை பெரிய முதலியார் சாவடியில் உள்ள தென்னந்தோப்பில் பட்டுப்போன மரத்தை அறுக்க மரத்தில் ஏறினார். அப்போது திடீரென மரம் வேரோடு சாய்ந்தது. இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த ஆதி கிருஷ்ணன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !