உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

செஞ்சி : செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி இறந்தார்.செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் மெயின் ரோடு, தொட்டியூர் கூட்ரோடு அருகே சாலையில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ