உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

விழுப்புரம், : விழுப்புரத்தில் கூலி தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த லோகு மகன் ஆனந்தகுமார், 48; கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 1ம் தேதி, வழுதரெட்டி அருகே உள்ள டீ கடையில், அவர் டீ குடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் கணேஷ், 21; சிகரெட் வாங்கி கொடுக்கும்படி கேட்டு தகராறு செய்து, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து, ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கணேஷ் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ