உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் கடத்திய வாலிபர் கைது

மது பாட்டில் கடத்திய வாலிபர் கைது

திண்டிவனம்: புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்த போது, ஆரணி அருகே கொசப்பாளையத்தை சேர்ந்த இமானுவேல், 34; என்பவர், புதுச்சேரியிலிருந்து, 25 மது பாட்டில்களை பையில் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி