உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை

கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் இருபுறமும் உள்ள கால்வாய்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டடுள்ளதால் மழை நீர் செல்ல முடியாமல் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டையிலிருந்து பாலையம்பட்டிக்கு செல்லும் வழியில் அரசு அலுவலகங்கள், போலீசார் குடியிருப்பு, புறநகர் குடியிருப்பு உள்ளது. இந்த வழியாக செல்லும் மதுரை ரோடு 80 அடியாக இருந்தது. தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 30 அடி ரோடாக சுருங்கியுள்ளன. ரோட்டின் இருபுறமும் உள்ள கால்வாய்களில் மழைநீர் சென்று செவல் கண்மாய் மற்றும் பெரிய கண்மாய்க்கு செல்லும். கால்வாயை சுற்றி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து முழுமையாக கால்வாய்கள் அடைக்கப்பட்டு விட்டன.

மழை காலங்களில் ஓடைகள் வழியாக மழைநீர் செல்ல முடிவதில்லை. மேலும், கால்வாய்கள் அடைபட்டுள்ளதால், புறநகர் பகுதி வீடுகளிலிருந்து வரும் கழிவு நீர் மற்றும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அங்கு கொட்டப்படுகின்றன. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளது. கழிவுகளை உண்ண வரும் பன்றிகள், நாய்கள் அங்கும் இங்கும் ஓடி வாகனங்களில் மீது மோதி விபத்தை உண்டாக்குகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: மதுரை ரோடு ஓடை பகுதியில் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க உள்ளோம். கூடிய விரைவில் அகற்றப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை