உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கம்ப்யூட்டர், அலைபேசி திருடிய பீகார் வாலிபர்கள் கைது

கம்ப்யூட்டர், அலைபேசி திருடிய பீகார் வாலிபர்கள் கைது

சிவகாசி : சிவகாசி அருணாச்சலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 49. இவர் பள்ளபட்டி ரோடு பகுதியில் ஆசிர் கண்டெய்னர் என்ற பெயரில் வாளி தயாரிக்கும் கம்பெனி வைத்துஉள்ளார். நேற்று காலை செந்தில்குமார் தனது கடைக்கு சென்ற போது, அங்கு இருந்த இரு கம்ப்யூட்டர், இரு அலைபேசிகளை காணவில்லை. கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடையில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகிகுமார் 25, ரவிக்குமார் 18, ஆகியோர் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் கம்பெனிக்கு வந்து கம்ப்யூட்டர், அலைபேசிகளை திருடி சென்றது தெரியவந்தது. கிழக்கு போலீசார், திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ