மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
விருதுநகர்:தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்து சிறுவன் அளித்த புகாரின்பேரில் அவனது தாய் முத்துலட்சுமி, 35, கள்ளக்காதலன் செல்வகுமார், 40, ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சித்திரவதை
விருதுநகர் ஏ.டி.பி., காம்பவுண்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை பிரிந்து 10 வயது மகனுடன் வசிக்கிறார். இவருக்கும் கள்ளிக்குடியைச் சேர்ந்த மனைவியை பிரிந்த செல்வகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வசிக்கின்றனர்.முத்துலட்சுமியின் மகன் சரியாக படிப்பதில்லை என செல்வகுமார் அவனை தொடர்ந்து அடித்துள்ளார். அவனது தாயும் சேர்ந்து அடிக்கடி அடித்து சித்திரவதை செய்துள்ளார். வழக்குப் பதிவு
கடந்த 30ம் தேதி இரவு இருவரும் தாக்கியதில் சிறுவன் காயமடைந்தான். நேற்று முன் தினம் காலை விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்த சிறுவன் தனக்கு நடக்கும் கொடுமையைக் கூறி அழுதான்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த போலீசார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்விக்கு தகவல் தெரிவித்தனர். சமூகப் பணியாளர் கார்த்திகைராஜன் வந்து, சிறுவனிடம் விசாரித்தார். அவர் அளித்த பரிந்துரைப்படி, சிறுவனின் புகாரை ஏற்ற மேற்கு போலீசார் சிறுவனின் தாய், மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago