உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் பாண்டியன் நகரில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

திருத்தங்கல் பாண்டியன் நகரில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

சிவகாசி : திருத்தங்கலில் பாண்டியன் நகர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திருத்தங்கல் பாண்டியன்நகர், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக பாண்டியன் நகரில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் நகர் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது. தண்ணீர் ஓடும் இடத்திலேயே குப்பை கொட்டப்பட்டுள்ளன அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. திருத்தங்கல் பகுதியில் கடந்த காலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம்செய்யப்பட்டு வருகின்றது. இது அனைவருக்கும் போதாத நிலையில், அனைவரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குழாய் உடனடியாக உடைப்பினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை