உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடவு

விருதுநகர்: விருதுநகரில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு ஆலமரம் அமைப்பின் சார்பில் 300 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை டி.எஸ்.பி., பவித்ரா தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் ஆலமரம் அமைப்பின் தலைவர் ரவீந்திரன், வரலொட்டி ஊராட்சித் தலைவர் திருப்பதி பங்கேற்றனர். இந்த மரக்கன்றுகள் டி.எஸ்.பி., அலுவலக வளாகம், மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகம், 7 போலீஸ் ஸ்டேஷன்கள், வரலொட்டி ஊராட்சி பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆலமரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ