உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுசின் 2வது புதிய கிளை திறப்பு விழா

ஸ்ரீவி.,யில் ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுசின் 2வது புதிய கிளை திறப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை மீனாட்சி ஃபேன் ஹவுசின் 2வது புதிய கிளை ஸ்ரீவில்லிபுத்துார் மதுரை ரோட்டில் திறக்கப்பட்டது.கலசலிங்கம் பல்கலைவேந்தர் ஸ்ரீதரன் திறந்து வைத்தார். பர்னிச்சர் பிரிவை தொழிலதிபர் முகமது ரபீக் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கலசலிங்கம் பல்கலை துணை தலைவர் சசி ஆனந்த் துவக்கி வைத்தார். ராஜ்ஸ்ரீ ஸ்பின்டெக்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஆனந்தகுமார், தாமோதரன், வழக்கறிஞர் சுவாதீஸ்வரன், மீனாட்சி பேன் ஹவுஸ் இயக்குனர் சுகன்யா கோகுல நம்பி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.விழாவில் இயக்குனர் அபிராமி சரவணன், செயல் இயக்குனர்கள் மனோஜ் கோகுல நம்பி உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களை நிர்வாக இயக்குனர் சரவணன் கவுரவித்தார்.நிர்வாகிகள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டாவது கிளையாக துவக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் முதல் முறையாக பர்னிச்சர் பிரிவு துவக்கப்பட்டு உயர்தர மரக்கட்டில்கள், சோபா, பீரோ, கம்பெனி மெத்தைகள் அதிரடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு 2 நாட்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள், பரிசுகள் வழங்கப்படுகிறது.ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயமும், ஜீரோ முன்பணம், கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கேஷ் பேக் ஆபர், குறிப்பிட்ட பொருட்களுக்கு ஒரு இ.எம். ஐ. இலவச ஆபர், வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது. மேலும் ஏ.சி.க்கு எக்சேஞ்ச் ஆபர், பைனான்ஸில் வாங்குவோருக்கு வட்டி இல்லா தவணை திட்டம், ஈசி இ.எம்.ஐ. போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு 98947 23308 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை