உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

திருநாகேஸ்வரமுடையாருக்கு 2 டன் மலர்களால் அபிஷேகம்

நரிக்குடி : நரிக்குடி எஸ்.கல்விமடையில் திருநாகேஸ்வரமுடையார், திருநாகேஸ்வரி தாயார் கோயிலில் 25ம் ஆண்டு புரட்டாசி விழா நடந்தது. மூலவர், உற்ஸவ மூர்த்திகளான சிவபெருமான், அம்பாளுக்கு, வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை உள்ளிட்ட 2 டன் மலர்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோயிலில் இருந்து சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள், வான வேடிக்கை முழங்க உற்ஸவர் பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ