மேலும் செய்திகள்
பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
30-Mar-2025
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி கலை, அறிவியல் கல்லுாரி இணைந்து ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு தின விழா கொண்டாடின. பேராசிரியர் கிருஷ்ணபிரபா வரவேற்றார். கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி கல்வி நிறுவனங்கள் தாளாளர் கண்ணன், கல்லுாரி நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் குருசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன், கலை கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராசிரியர் இளையராஜா நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
30-Mar-2025